adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

துலாம்:

இந்த வாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் உச்சநிலையை அடைந்திருக்கிறார். எதையும் அனுபவிக்க கொடுக்கும் பாக்கியதிபதி புதன் அங்கே நீச்சத்தை அடைந்தாலும் முறையான நீச்சபங்கம் பெற்றிருப்பது யோகம். புதனின் நீச்சபங்க ராஜயோக வலுவால் அறிவுசார்ந்த துறைகளில் இருப்பவர்கள் மற்றும் புத்தியை மூலதனமாக வைத்து தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானங்கள் உண்டு. சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் இருக்கும்.

புதனின் பலத்தால் லயசனிங் எனப்படும் பணத்திற்காக வேலை முடித்துக் கொடுப்பவர்களுக்கு காரியங்கள் சுலபமாக முடியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். ஜீவன அமைப்புகள் இலாபத்துடன் நடக்கும். அதிகாரம் செய்யும் பதவியில் இருப்பவர்களுக்கு இது நல்ல வாரம். பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமைகள் வரும் என்பதால் தொழிலில் அக்கறை காட்டுங்கள். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

துலாம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் நட்பு நிலையில் நான்கு மற்றும் ஐந்தாமிடத்தில் இருப்பது துலாம் ராசிக்கு ஒரு யோக அமைப்பு. அதேநேரத்தில் அவர் அங்கே செவ்வாய், சனியுடன் இணைந்திருப்பது யோகத்தை முழுமையாக அனுபவிக்க இயலாத நிலை. துலாம் ராசிக்காரர்கள் முயற்சிக்கு பின்பு வெற்றிகளை அடைகின்ற மாதமாக மார்ச் இருக்கும். விடாமுயற்சியுடன் நீங்கள் செய்யும் செயல்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் மாதம் இது.


ராகு,கேதுக்கள் ஆறு மற்றும் 12ல் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் உண்டு. சிலர் வெளிநாடு, வெளி மாநிலம் செல்வீர்கள். சிலருக்கு குருட்டு அதிர்ஷ்டம் செயல்படும். எதிர்பாராத ஏதேனும் ஒரு நல்ல லாபத்தை இந்த மாதம் எதிர்பார்க்கலாம். குரு ராசியைப் பார்ப்பதால் இதுவரை தொழில் விஷயங்களிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருந்து வரும் அதிர்ஷ்டமற்ற நிலைமைகள் மாறும். சொந்த வாழ்க்கையில் சென்ற காலங்களில் இழப்புகளை சந்தித்தவர்கள், இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகாதவர்கள் மற்றும் திருமணம், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மார்ச் மாதம் சந்தோஷத்தை தரும்.

சுக்கிரனின் வலுவால் மனம் உற்சாகமாக இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. சிலருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாகும். சிலருக்கு கோவில் திருப்பணி செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வத்தின் துணை கொண்டு எதையும் சாதிப்பீர்கள்.

பத்தாம் இடம் வலுப்பெறுவதால் மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். இதுவரை சிக்கலைத் தந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். பணவரவு வந்து கொஞ்சம் நிம்மதிக்கு வழி வகுக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.

1,5,6,8,17,18,24,25,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 14 -ம்தேதி இரவு 10.39 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 4.21 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய விஷயங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் கோபப்பட்டு பேசுவதும் இந்த நாட்களில் கூடாது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537