adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

மிதுனம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் புதன். நீச்சம் மற்றும் ராகுவோடு சேர்ந்து கிரகணம் என்ற நிலையில் இருந்தாலும் கூட, யோகாதிபதி உச்ச சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் நீச்ச பங்க ராஜ யோக நிலையை பெறுவது மிகவும் சிறப்பு.  உங்களுடைய மனம் தெளிவாக இருக்க கூடிய வாரம் இது.  கடந்த காலங்களில் உங்களுடைய கண்ணுக்கு மறைக்கப்பட்ட சில விஷயங்கள் இப்போது பரம் பொருளின் அருளினால் தெளிவுபடுத்தப்படும். என்ன முடிவு எடுப்பது என்பது போன்ற குழப்பங்களில் இருந்தவர்களுக்கு தீர்வுகள் தேடி வரக் கூடிய நல்ல வாரம் இது.

ஒரு குறிப்பிட்ட பலனாக இந்த வாரம் பருவவயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். காதல் போன்ற வயதுக்கேற்ற விஷயங்கள் இப்போது உங்கள் காதுக்கு வரும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். 15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். இணையம், யூ ட்யூப், சமூக ஊடகங்கள் மூலமாக பொருள் சம்பாதிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல திருப்பு முனைகள் உண்டு. யார் மனதிலும் தோன்றாத சில புதிய ஐடியாக்கள் இப்போது மிதுனத்தினருக்கு தெரிய வரும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
 
கைப்பேசி : +91 9768 99 8888

மிதுனம்:

மாதத்தின் பெரும் பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் பத்தாம் இடத்தில் நீச்ச நிலையில் இருந்தாலும் கூட, ராகுவுடன் இணைந்து கிரகண தோஷத்திலும் இருக்கிறார். இது உண்மையில் ஒரு வலிமையற்ற நிலை. இது போதாது என்று யோகாதிபதி சனியும், சுக்கிரனும் செவ்வாயுடன் இருப்பது சில திருப்தியற்ற நிலைகளைத் தரும் என்பதால் ஏற்றுக் கொள்ள முடியாத சில முடிவுகளை நீங்கள் செயல்படுத்த வேண்டிய மாதமாக இது இருக்கும். பண வரவை குறிக்கும் லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் இந்த மாதம் பணம் கிடைக்கும். எதுவும் எல்லை மீறாது. மார்ச் மாதம் உங்களுக்கு மாற்றங்களை தருகின்ற மாதமாக இருக்கும்.

உங்களில் சிலருக்கு வட மாநில பிரயாணங்களையோ, சிலருக்கு வெளிமாநில வெளிநாடு வேலை மாறுதல்களையோ சனி தருவார். பாக்கிய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் இணைவது சுற்றியிருப்பவர்கள் உங்களை வெறுப்பேற்றி கோபம் வரவழைக்கும் ஒரு அமைப்பு. எனவே பேச்சிலும் செயலிலும் நிதானம் வேண்டும். எதற்கும் பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள். நிதானமாக இருங்கள். ஆயினும் பாபர்கள் இருவரும் சுக்கிரனால் சுபத்துவப் படுத்தப் படுவதால் தொல்லைகள் இருக்காது. மாத பிற்பகுதியில் சூரியன் பத்தாமிடத்திற்கு மாறுவதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் லாபத்தை தரும். பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும்.

மாதம் முழுவதும் புதன் நீச்ச நிலையில், கிரகண தோஷத்தில் இருப்பதால் உங்களில் சிலருக்கு மனதில் ஒருவிதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். இந்த நிலைமை விரைவில் மாறும். மிதுனத்திற்கு அடுத்த மாதம் முதல் மிக நல்ல பலன்கள் உண்டு.  மூன்றாமதிபதி சூரியன் அந்த வீட்டிற்கு எட்டில் மறைவதால் நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவிகள் கூட பொறாமை கொண்டவர்களால் தடுக்கப்பட்டு கிடைக்காமல் போகும். இருந்தாலும் குருவின் வலுவால், தனி ஒருவராகவே சாதித்துக் காட்டுவீர்கள். மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். எதிர்பாராத பணவரவு இருக்கும் என்பதால் மார்ச் மாதம் பெரிய சோதனைகளைக் கொடுக்காத மாதம்தான். 

1,3,7,8,9,14,15,17,29,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம் தேதி இரவு 8.28 மணி முதல் 8-ம் தேதி இரவு 9.20 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ யாரையும் நம்பி முடிவெடுப்பதோ இந்த நாட்களில் கூடாது. கூடுமானவரை எதையும் இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537