adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்சம், யோகாதிபதி சனி ஆட்சி என ரிஷபத்திற்கு யோக வாரம் இது. உங்களைப் பிடிவாதக்காரர் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள் நல்ல மனதைத் தெரிந்து கொண்டு அருகில் வருவார்கள். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். பெண்களால் லாபம் கிடைக்கும். அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள்  கிடைக்கும்..

கோர்ட் கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் சாதகமாகத் திரும்பும். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும். எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இருக்காது. சுக்கிரனின் வலுவால் இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். மனதிற்குள் காதலிக்க ஆரம்பித்து மயக்கத்தில் இருப்பீர்கள். நல்ல எதிர்காலத்திற்கான  ஆரம்ப வாரம் இது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

ரிஷபம்:

மார்ச் மாத ஆரம்பத்தில் ராசிநாதன், சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்திருக்க. பிற்பகுதியில் சனியுடன் இணைகிறார். ராசிநாதன் இரண்டு பெரும் பாபர்களுடன் இணைவது ரிஷப ராசிக்கு சில திருப்தியற்ற நிலைகளைத் தரும் என்பதால் ஏற்றுக் கொள்ள முடியாத சில முடிவுகளை நீங்கள் செயல்படுத்த வேண்டிய மாதமாக இது இருக்கும். உங்களில் சிலருக்கு பிடிக்காத ஒன்றை சகித்துத்தான் ஆகவேண்டும் என்கின்ற நிலைமையும் ஏற்படும். உங்களில் சிலருக்கு மனதில் ஒருவிதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். இந்த நிலைமை இந்த மாதம் மட்டும்தான். என்ன இருந்தாலும் சுக்கிரன் நட்பு வீட்டில் இருப்பதால் சமரசங்களிலும், நீங்கள் நிறைவுகளை பெறுகின்ற மாதம் இது.


அதேநேரத்தில் ராசிநாதன் சுக்கிரன் மாத பிற்பகுதியில் நட்புநிலையில் பத்தாம். வீட்டில் நண்பருடன் இருப்பது யோக அமைப்பு. எனவே மாதத்தின் பிற்பகுதி நாட்கள் உங்களுக்கு எதிலும் சிக்கல்கள் இருக்காது. குறிப்பாக கடன் தொல்லைகள் இருக்காது. லாப ஸ்தானம் எனும் பதினோராம் வீட்டில் ராகு இருப்பதால் பணவரவு இருக்கும். பிரச்னைகளை சமாளிப்பீர்கள். முற்பகுதியிலும், பின்னாலும் இருவேறு எதிர் கிரக நிலைகளை கொண்ட மாதம் இது என்பதால் அனைத்திலும் நன்மைகளும் தீமைகளும் கலந்து நடக்கும். என்ன இருந்தாலும் ராசிநாதன் வலிமையாக இருப்பதால் எதையும் சமாளித்தும், ஜெயித்தும் காட்டுவீர்கள்.

செவ்வாய், சனியுடன் சுக்கிரன் இணைந்தே பயணிப்பதால் பெரியஅளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள், பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. பருவ வயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். சுக்கிரனின் நட்பு பலம் நல்லவைகளைத் தரும். எதற்கும் அதிகமுயற்சி தேவைப்படும். பத்தாமிடம் வலுவாக இருப்பதால் வேலை, தொழிலுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். சிலருக்கு வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் மேலதிகாரிகளிடம் பணிந்து போவது நல்லது. வேலை தேடும் இளைய பருவத்தினருக்கு  விருப்பமில்லாத அமைப்பில் வேலை கிடைக்கும். ஆன்மிகம் சம்மந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடைபெறும்.

5,6,7,10,11,16,18,19,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம்தேதி மாலை 4.21 மணி முதல் 6-ம் தேதி இரவு 8.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்டதூர பிரயணங்கள், புதிய முயற்சிகளை இந்த நாட்களில் தள்ளி வைப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537