adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 32 (7.4.15)

தொ. . சீனிவாசன், மதுரை.

கேள்வி :
செவ்,சூ பு,சுக்
ராசி  ரா
கே
செவ் குரு கே
மூத்த மகனுக்கு 2002 ல் திருமணமாகி கைக் குழந்தையுடன் சென்ற மருமகள் திரும்ப வராததால் விவாகரத்தாகி கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரி என்ற நிலையில் என்னுடன் இருக்கிறான். 34 வயதான இளையவன் திருமணத்திற்காக ஏழு வருடமாக போராடுகிறேன்இன்றுவரை ஒரு பெண் பார்க்கும் நிகழ்ச்சி கூட நடக்கவில்லைஇருவருக்கும் திருமணமாகி என் ஆயுளுக்குள் பேரன், பேத்திகளைப் பார்க்க முடியுமா? 76 வயதில் எனக்கு ஏன் இந்த நிலைமை?
பதில்:
மூத்த மகனின் ஜாதகம் மிதுன லக்னம் என்று தவறாக கணிக்கப்பட்டுள்ளது. என்னுடைய கணிப்பின்படி அவருக்கு ரிஷப லக்னமாக இருக்கும். மீண்டும் ஜாதகத்தை சரியாகக் கணித்து அனுப்பவும்.
இளையவருக்கு மீன லக்னம் கன்னி ராசியாகி. இரண்டில் செவ்வாய், ஏழில் சனி என்ற அமைப்பு. இதுவே ராசியில் சனி, ராசிக்கு எட்டில் செவ்வாய் என்ற கடுமையான நிலையாகவும் அமைந்து ஏழுக்குடைய புதன் நீசம்பெற்று குடும்ப ஸ்தானத்தில் ஆறுக்குடைய சூரியன் உச்சம் பெற்று குடும்ப பாவமும் கெட்டு தற்போது ராகுதசை நடப்பதாலும் புத்திரதோஷம் இருப்பதாலும் திருமணம் தாமதமாகிறது.
2016 ஆவணி மாதம் அவரது 35-வது வயதில் அவருக்கு திருமணமாகும். 2017ம் வருட பிற்பகுதியில் அவர் மூலமான பேரனை மடியில் வைத்து கொஞ்சுவீர்கள்.
செந்தமிழ்செல்வி, மன்னார்குடி.
கேள்வி :
சந் செவ் கே
ராசி  பு
சனி  சூ,சுக் குரு
ரா
 
எனது இளைய மகன் டிப்ளமோ முடித்து பி. . சேர்ந்து ஒரே மாதத்தில் நின்றுவிட்டான். ஒரு வருடம் வேலைக்கு போனவன் அந்த வேலையில் இருந்தும் நின்று விட்டு வெளிநாட்டு வேலைக்கு மட்டுமே செல்வேன் என்று சொல்லி மூன்று வருடமாக வேலையில்லாமல் இருக்கிறான்.வெளிநாட்டு வேலைக்கு போவானா? குருஜி அய்யாவின் பதிலை எதிர்பார்க்கிறோம்.
பதில்:
கும்ப லக்னம் ரிஷப ராசி. நான்கில் செவ், ஆறில் புத, ஏழில் சூரி, சுக், குரு. பதினொன்றில் ராகு. பனிரெண்டில் சனி. (21.8.1992, 6.15 மாலை, மன்னார்குடி.)
ராகு தசை நடந்து அடுத்து சரராசியான பனிரெண்டில் இருக்கும் சனி புக்தி மே மாதம் 2016-க்கு மேல் வரப்போவதால் உங்கள் மகன் ஜனவரி 17, 2016-க்கு மேல் வெளிநாடு செல்வார். அங்கு நன்கு சம்பாதிக்கவும் செய்வார்.
எஸ். ஜனார்த்தனம், நெல்லை.
கேள்வி :
கே சந்  செவ் குரு
சூ,பு சுக் ராசி
 சனி
ரா
மகனுக்கு காதல் திருமணம் முடிந்து ஒன்பது ஆண்டு ஆகியும் புத்திர பாக்கியம் இல்லை. பரிகாரங்களும் செய்யப்பட்டுள்ளன. ஏன் குழந்தை இல்லை? எவ்வளவு காலத்திற்குள் புத்திர பாக்கியம் கிடைக்கும்? முதல் குழந்தை ஆணா? பெண்ணா? எத்தனை குழந்தைகள்?. இயற்கையான குழந்தை பிறப்பா? டெஸ்ட்டியூப் பேபியா? நல்ல பதில் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
கணவனுக்கு ரிஷப லக்னம், மேஷ ராசி. இரண்டில் குரு. மூன்றில் செவ். நான்கில் சனி. ஐந்தில் ராகு. ஒன்பதில் புத. பத்தில் சூரி, சுக். (14.2.1978, 1.00 பகல், நெல்லை)
மனைவிக்கு மகர லக்னம், மகர ராசி. ஆறில் சுக், ராகு. ஏழில் சூரி. எட்டில் புத. ஒன்பதில் சனி. பத்தில் செவ், குரு. (5.8.1982, 5.40 மாலை, ஈரோடு)
மகன் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தில் ராகு, ராசிக்கு ஐந்தில் சனி. ஐந்திற்குடையவனை நீச செவ்வாய் பார்த்து கடுமையான புத்திர தோஷம். மருமகள் ஜாதகத்தில் ஐந்திற்குடையவன் ஆறில் மறைந்து ராகுவுடன் இணைந்து சனிபார்வை பெற்று ஐந்தாம் இடத்தை செவ்வாய் பார்த்து கடுமையான புத்திரதோஷம்.
நீங்கள் செய்ததாக சொல்லியிருக்கும் பரிகாரங்கள் முறையானவை அல்ல. மகனுக்கு அஷ்டமச்சனி நடப்பதால் புத்திர பாக்கியம் இன்னும் தாமதமாகும். இருவருக்கும் ராகுபகவானால்தான் தடை ஏற்படுகிறது. உங்கள் மகனுக்கு நடக்கும் ராகு தசையும் இதை உறுதி செய்கிறது. ராகுவால் உண்டாகும் கடுமையான தோஷங்களுக்கு ஶ்ரீகாளஹஸ்தியே கண்கண்ட பரிகார ஸ்தலம்.
முறையான பரிகாரங்களைச் செய்ய எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் காளத்திநாதன் உங்களை அனுமதித்தால் மருமகளுக்கு தற்போது நடைபெறும் சுக்கிர புக்தியில் 2016 இறுதியில் குழந்தை பிறக்கும். இல்லையெனில் மருமகளின் ராகு புக்தியில் 2020ல் தான் புத்திர பாக்கியம். முதல் குழந்தை பெண் குழந்தை. இந்தக் காலத்தில் யாரும் ஒரு டஜன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில்லை. செயற்கை முறைக் கருத்தரிப்பு.
. இராதா, மதுரை.
கேள்வி :
குரு சனி
 கே ராசி  செவ் பு,சுக்
 சந்,சூ ரா
 
வரும் கல்வியாண்டில் பிளஸ்டூ படிக்க இருக்கும் எனது மகளுக்கு மருத்துவத் துறையில் படிக்க ஆசை. அவளது ஆசை நிறைவேறுமா?அல்லது பொறியியல் அல்லது வேளாண் துறையை தேர்வு செய்யலாமா? 
 
பதில்:
மகர லக்னம், சிம்ம ராசி. மூன்றில் குரு. நான்கில் சனி. ஏழில் புத, சுக், செவ். எட்டில் சூரி, ராகு. (23.8.1998, 4.35 மாலை, மதுரை).
பொறியியல்துறை உங்கள் மகளுக்கு ஏற்றது. மருத்துவத்திற்கு சூரியன் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் மகளுக்கு சூரியன் ஆட்சியாக இருப்பது போலத் தோன்றினாலும் ராகுவுடன் மிகநெருங்கி இணைந்து கிரகணத்தன்று பிறந்ததால் வலுவிழந்திருக்கிறார். பத்தாமிடத்தை சனி, செவ்வாய் இரண்டும் பார்ப்பதால் பொறியியல், சிறப்பு..
கே. வி. ராமச்சந்திரன், மஞ்சகுப்பம்.
கேள்வி :
ல ரா சுக்
ராசி  செவ் பு
குரு  சூ
 சந்,கே சனி
மகனுக்கு எப்போது கல்யாணம் கைகூடும்?
பதில்:
மேஷ லக்னம், துலாம் ராசி. லக்னத்தில் ராகு. மூன்றில் சுக். நான்கில் புத, செவ். ஐந்தில் சூரி. ஏழில் சனி. பத்தில் குரு. (21.8.1985, 10.12 இரவு, உடுமலைப்பேட்டை).
லக்னம் கேதுவின் நட்சத்திரத்தில் அமைந்து லக்னத்தில் ராகுவும் அமர்ந்து லக்னாதிபதி நீசமாகி லக்னத்தையும் லக்னாதிபதியையும் உச்ச சனி பார்த்த ஜாதகம். ராசியும், ராகுவின் நட்சத்திரமாகி சனியுடன் இணைந்ததால் வலுவிழந்தது. சனியும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டதும் குற்றம்.
லக்னமும் ராசியும் பலவீனமானால் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகள் அனைத்தும் தாமதமாகும். லக்னாதிபதியை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். 2017 தைமாதம் திருமணம் நடக்கும்.
குழந்தையுடன் சேர வாய்ப்புள்ளதா?
எஸ். தமிழ்செல்வன், திருப்பூர்.
கேள்வி :
சந் பு சூ குரு சுக் கே
ராசி  ல
 செவ்
ரா  சனி
ஆறு மாதமாக என் மூன்று வயது பெண் குழந்தை இருக்கும் இடம் தெரியவில்லை. அவள் அம்மா தூக்கிச் சென்றுவிட்டாள். இருவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. நிறைய இடத்தில் ஜாதகம் பார்த்தும் யாரும் சரியான பதில் சொல்லவில்லை. தொடர்ந்து மாலைமலர் படிக்கும் நான் நீங்கள் மட்டுமே இதற்கு சரியான பதில் தரமுடியும் என்று நினைக்கிறேன். என் குழந்தை என்னிடம் சேரவாய்ப்பு உள்ளதா? விலகி நின்றாவது என் குழந்தையைப் பார்க்க முடியுமா? இன்றைய நிலையில் எதுவானாலும் என் குழந்தையை மட்டும் பார்த்தால் போதும் என்று தோன்றுகிறது. குருஜி அவர்கள் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
கடக லக்னம், மீன ராசி. இரண்டில் செவ். நான்கில் சனி. ஒன்பதில் புத. பத்தில் சூரி, குரு. பதினொன்றில் சுக், கேது. (19.4.2012, 12.21 பகல், கோவில்பட்டி)
பிறந்ததிலிருந்தே குழந்தையின் ராசிப்படி அஷ்டமச்சனி நடந்திருக்கிறது. உங்கள் ஜாதகமும் மனைவியுடையதும் அனுப்பவில்லை.
அனுப்பியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கண்டுபிடித்திருக்கலாம்.. குழந்தையின் ஜாதகப்படியே தந்தைகாரகன் சூரியனையும் தந்தை ஸ்தானாதிபதி குருவையும் உச்ச சனி பார்ப்பதால் நீங்கள் மனக்கட்டுப்பாடு இல்லாத ஆளாக இருப்பீர்கள்.
ஆயினும் குழந்தையின்மேல் நீங்கள் வைத்திருக்கும் பாசம் உங்கள் கடிதத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு நல்ல கணவனாக நீங்கள் இல்லாமல் இருந்தாலும் ஒரு தகப்பனாக இருக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். ஆழ்மனத்தில் இருந்துவரும் உண்மையான வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் பரம்பொருள் கண்டிப்பாக நிறைவேற்றியே தீரும்.
அதேபோல மகளின் ஜாதகப்படி நான்காமிடத்தில் உச்சசனி அமர்ந்து சந்திரனுடன் நீசபுதன் இணைந்ததால் உங்கள் மனைவியும் அவசரக்குடுக்கைதான். பெற்றோர் ஜாதகம் இல்லாததால் நீங்கள் எப்போது இணைவீர்கள் என்று சொல்ல முடியாது. குழந்தையின் ஜாதகப்படி அவளது 4 வயது 7 மாதங்களுக்குப்பிறகு அவளை நீங்கள் பார்க்க முடியும்.
கே. முருகநாதன் - சாந்தாதேவி, கோவை - 36.
கேள்வி :
ரா
 சந் ராசி
குரு
 ல சனி பு,சூ சுக் கே குரு கே
மகன் மிகவும் கோபக்காரனாக இருக்கிறான். அவனுக்கு கெட்ட பழக்கங்கள் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்படும் என்கிறார்கள். என் குடும்பத்தில் உள்ளவர்கள் போதைப் பழக்கத்தினால் குடும்ப வாழ்க்கை சரியில்லாமல் இருக்கிறார்கள். கணவர் குடும்பமும் சரியில்லை. மகனுக்கு அந்த நிலைமை ஏற்படாமல் இருக்க குருஜி அவர்கள் வழிகாட் டவேண்டும்.
பதில்:
தனுசு லக்னம், கும்ப ராசி. இரண்டில் குரு. ஐந்தில் ராகு. பத்தில் செவ். பதினொன்றில் சுக். பனிரெண்டில் சூரி, புத, சனி. (21.11.1985, 9.35 காலை, கோவை).
லக்னாதிபதி வலுவிழந்து சனியால் பார்க்கப்பட்டாலே ஒரு மனிதன் தன் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது கடினம். செவ்வாய் லக்னத்தை பார்ப்பதால் உங்கள் மகன் மிகுந்த கோபக்காரன்தான். 9 வயது முதல் 28 வயது வரையிலான சனி தசையை தாண்டிவிட்டதால் இனிமேல் உங்கள் மகன் நிரந்தரமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக வாய்ப்பு இல்லை. விபத்துக்களும் ஏற்படாது.

2017-ம் ஆண்டு ஆவணி மாதம் திருமணம் நடைபெறும். லக்னாதிபதி குருபகவான் நீசம் பெற்றதால் அவரை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *